இலங்கையில் வாகன இறக்குமதி தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

நாட்டில் வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பில் பல காரணிகளை கவனமாக பரிசீலித்த பின்னரே தீர்மானிக்க வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய Ranjith Siyambalapitiya தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இறக்குமதி கட்டுப்பாடுகள் தொடர்பாக தேசிய பொருளாதார மற்றும் பௌதீகத் திட்டங்கள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் அண்மைய கூட்டத்தின் போது முன்வைக்கப்பட்ட யோசனை தொடர்பில் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிட்டிய,

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் நோக்கில் பல காரணிகளை கருத்திற்கொண்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும், அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக சுமார் 4,000 பொருட்களை இறக்குமதி செய்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு இருக்கையில், 3,000 க்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

Recommended For You

About the Author: webeditor