தாயை தாக்கி விட்டு விபரீத முடிவெடுத்த மகன்!

தாயைத் தாக்கி விட்டு மகன் விபரீத முடிவெடுத்து உயிர்மாய்த்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

புதுக்குடியிருப்புப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட றெட்பானா, மாணிக்கபுரம் பகுதியில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணேசன் கேதீஸ்வரன் (வயது-33) என்பவரே நேற்று அதிகாலை இடம்பெற்ற இச் சம்பவத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் தொடர்பில் தெரிய வந்தவை
10 வருடங்களுக்கு முன்னர் மனைவியைப் பிரிந்து, தாய் மற்றும் சகோதரியுடன் வசித்து வந்துள்ளார்.

சகோதரி தொழில் நிமிர்த்தம் கொழும்பில் தங்கியுள்ளார். இந் நிலையில் நேற்றுமுன்தினம் தாயாருடன் முரண்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து தாயைத் தாக்கியுள்ளார்.

இதனால் தாயார் அருகில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ளார்.

கொழும்பிலிருந்து மகள் நேற்று அதிகாலை விடுமுறையில் வந்து இருவரும் வீட்டிற்குச் சென்றபோது தூக்கில் தொங்கிய நிலையில் அவரது சடலம் காணப்பட்டுள்ளது.

இது தொடர்பில் புதுக்குடியிருப்புப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor