காதலியை தோட்டத்தினுள் புதைத்த காதலன்

மதவாச்சி பகுதியில் பெண் ஒருவரை புதைத்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை கடந்த சில தினங்களாக காணவில்லை என அவரின் உறவினர்களால் காவல் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் காணாமல் போன பெண்ணின் காதலனிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட போது உண்மை வெளிவந்துள்ளது.

இதற்கமைய குறித்த நபர் தனது காதலியான காணாமல் போன பெண்ணை அவரின் தோட்டத்தில் புதைத்துள்ளார் என கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் புதைக்கப்பட்ட பெண் மரணித்தமைக்கான காரணம் தொடர்பில் அறிவதற்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Recommended For You

About the Author: webeditor