இலங்கை அரசிடம் உதவி கோரியுள்ள ஐக்கிய இராச்சிய அரசு

ஐக்கிய இராச்சியத்திற்கு இலங்கையர்கள் சட்டவிரோதமாக செல்வதைத் தடுப்பதற்காக அந்நாட்டு அரசாங்கம் இலங்கை அரசிடம் உதவி கோரியுள்ளது.

சமீபத்தில் இலங்கையின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலெஸ்சை சந்தித்த இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் பிரித்தானியாவிற்கு இலங்கையர்கள் சட்டவிரோதமாக வருவதைத் தடுக்க உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த சந்திப்பின் போது நாட்டின் தற்போதைய நிலை குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.

Recommended For You

About the Author: webeditor