இலங்கையில் உள்ள 70 அரச அதிகாரிகள் தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்

இலங்கையில் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலங்கள், முடிவடைந்துள்ள நிலையில், நிர்வாக பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள சுமார் 70 பேர் அந்த பதவிகளில் பணியாற்றுவதற்கு தகுதியற்றவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த அதிகாரிகளை உடனடியாக அந்தப் பதவிகளிலிருந்து நீக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளதாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, இதுபோன்ற பல அதிகாரிகள் ஏற்கனவே நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில், முறைகெடான அதிகாரிகள் இனங்காணப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து நிர்வாகப் பணிகளுக்காக அதிகாரிகள் (செயலாளர்கள் மற்றும் ஆணையர்கள்) நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor