முருகன் சிலை கடத்திய மூவர் கைது

முருகன் சிலை கடத்திய குற்றச்சாட்டின் பேரில் மன்னார் எருக்கலம்பிட்டி பகுதியைச் சேர்ந்த இரண்டு பெண்களும் ஆண் ஒருவரும்  கைது செய்யப்பட்டனர்.

நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (07.05.2023) மன்னார் பிரதான பாலத்தடியிலுள்ள சோதனைச் சாவடியில் சோதனை நடவடிக்கையின் போது தொல்பொருள் என சந்தேகிக்கப்படும் சிறிய அளவிலான முருகன் சிலை  ஒன்றை தம் உடமையில் வைத்திருந்த தன் அடிப்படையில் மூவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த மூவரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்த பொலிஸார் மேலதிக விசாரணைக்காக மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Recommended For You

About the Author: S.R.KARAN