அநுராதபுரம் மார்க்கெட் பிளேஸில் உள்ள கட்டடத் தொகுதியில் உள்ள பல வர்த்தக நிலையங்களில் இன்று (20) தீ பரவல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தீயைக் கட்டுப்படுத்த அநுராதபுரம் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எனினும் தீ வேகமாக பரவியதாகவும், ஒரு கடையில் ஏற்பட்ட தீ அருகில் உள்ள பல கடைகளுக்கும் பரவியதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.
இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்த தகவல் வெளியாகாத நிலையிஒல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.