யாழ் பொது நூலகத்தில் ஏற்ப்பட்டுள்ள சிக்கல்!

யாழ்ப்பாணம் பொதுநூலகத்தின் நூல்கள் இரவல் பெறும் புத்தக விறாக்கை பகுதியில் கடுமையான வெப்பம் நிலவுவதால் தமக்குரிய புத்தகங்களை பொறுமையாக தேடமுடியாத நிலை உள்ளதாக நூலக வாசகர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் தற்போதைய வெப்பகால நிலையினை கருத்தில் கொண்டு வெப்பத்தை தவிர்க்கும் வழிமுறைகளை ஏற்படுத்தி வாசகர்களின் அசௌகரியங்களை தவிர்க்க உரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரிக்கை விடுக்கின்றனர்.

மேலும் குறித்த பகுதியில் காணப்படும் புத்தகங்கள் தூசிபடிந்து பழுதடையும் நிலை காணப்படுவதாக கவலை வெளியிட்டுள்ள வாசகர்கள் அவற்றை நாளாந்தம் பராமரிக்கும் நூலக கவனிப்பாளர்கள் கடமையில் இல்லாமையே இவற்றுக்கு காரணம் எனவும் அவர்களை நியமிப்பதன் ஊடாக விரைந்து புத்தகங்களை பாதுகாக்க முடியுமென தெரிவித்துள்ளனர்.

தமிழ் மக்களின் பண்பாட்டுப் பொக்கிஷமான யாழ்ப்பாண நூலகத்தின் குறைகளை நிவர்த்திக்க உரிய நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor