காணி தகராறு முற்றியதையடுத்து 60 வயதுடைய ஒருவர் தனது மூத்த சகோதரியின் 74 வயதான கணவரை மண்வெட்டியால் தாக்கிக் கொலை செய்துள்ளதாக கல்னேவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தாக்குதலில் ஹெலபதுகம, கல்னேவவில் வசிக்கும் அபேரத்ன பண்டா என்ற விவசாயியே உயிரிழந்துள்ளார்.
60 வயதுடைய நபர் கைது
கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஹெலபதுகம, கல்னேவையைச் சேர்ந்த 60 வயதுடைய நபர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதான நபர் கடந்த 16ஆம் திகதி ஹெலபதுகம பிரதேசத்தில் உள்ள நெல் வயல் ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்தபோது, அங்கு சென்ற அவரது மூத்த சகோதரிக்கும் அவரது கணவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டபோதே இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.