சீனாவை அடுத்து இலங்கை குரங்குகளுக்கு விண்ணப்பித்துள்ள மற்றுமோர் நாடு

சீனாவைத் தொடர்ந்து இலங்கையிலிருந்து குரங்குகளை பெற அமெரிக்கா விண்ணப்பித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

எனினும், அமெரிக்காவிற்கு தேவையான குரங்குகளை எண்ணிக்கை இதுவரை அறிவிக்கப்படவில்லை என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர (Mahinda Amaraweera) தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கு ஒரு லட்சம் குரங்குகளை வழங்குவதற்கான வழிமுறைகளை தயாரிப்பதற்கான குழு ஒன்றை நியமிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

விலங்குகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதே பொருத்தமானது எனவும், விலங்குகளை வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டாம் என எவரும் கூறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor