புத்தாண்டு தினத்தன்று தந்தையை தாக்கிய பொலிஸ் உத்தியோகஸ்தர்

பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் புத்தாண்டு தினத்தன்று மதுபோதையில் வீட்டுக்குச் சென்று தனது தந்தையை தாக்கி வீட்டில் உள்ள சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் வலஸ்முல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்தோடு இவர் குருணாகல், அலவ்வ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து 15 ஆம் திகதி முதல் அமுலுக்குவரும் வகையில் சந்தேக நபர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குருணாகல் பிரிவிற்க்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உபுல் சந்தன அபேசிங்கவின் பணிப்பின் பேரில் முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டு பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor