முன்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.!

முன்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.!

யாழ்.கட்டுடை மானிப்பாய் விநாயகர் முன்பள்ளியில் கல்வி பயிலும் முப்பது மாணவர்களுக்கு பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரான யாழ்.தீவகம்,வேலணை மேற்கு சரவணையைச் சேர்ந்த திரு விசுவாசம் செல்வராசா(பிரான்ஸ்) அவர்களின் நிதி ஏற்பாட்டில் முப்பதினாயிரத்தி ஐந்நூறு(30500.00)ரூபாய் பெறுமதியான கற்றல் உபகரணங்கள், பூமணி அம்மா அறக்கட்டளையின் இலங்கைக்கான நிர்வாகிகளான அறக்கட்டளையின் செயலாளரும் முன்னாள் வட மாகாணசபை,யாழ். மாநகரசபை,வலிகாமம் தெற்கு

பிரதேசசபை,சுன்னாகம்,உறுப்பினருமான ந.விந்தன் கனகரட்ணம்,அறக்கட்டளையின் ஆலோசகர் இ.மயில்வாகனம் ஆகியோரால் 11/02/2023 அன்று வழங்கி வைக்கப்பட்டது.மேற்படி நிகழ்வில்,முன்பள்ளியின் பொறுப்பாசிரியர்,திருமதி யுசாந்தன் வாசுகி,சமூக செயற்பாட்டாளர் திருமதி மதுஷன் இந்துஜா,
பெற்றோர்கள்,மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு நிகழ்வினைச் சிறப்பித்தனர்.

Recommended For You

About the Author: webeditor