இலங்கை சாரணர் சங்க வவுனியா ஆணையாளராக ஜனாதிபதி சாரணன் நியமனம்!

இலங்கை சாரணர் சங்கத்தினால் வவுனியா மாவட்டத்திற்கான புதிய ஆணையாளராக யோகதாஸ் கஜேந்திரன் 24.01.2024 அன்று உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனத்தினை பிரதம ஆணையாளர் ஜனப்பிரித் பெர்ணாண்டோ அவர்கள் புதிய வவுனியா மாவட்ட ஆணையாளர் கஜேந்திரனிடம் இலங்கை சாரணர் சங்கத்தின் தேசிய தலைமைக் காரியாலயத்தில் வைத்து... Read more »

போராட்டத்தை முன்னெடுத்த சுகாதார ஊழியர்கள்

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சிற்றூளியர்களின் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று இடம்பெற்றது. வைத்தியர்களுக்கு வழங்கிய 35000 ரூபா கொடுப்பனவை அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் சமமாக வழங்கவேண்டும் மற்றும் பதவி உயர்வு போன்ற கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த போராட்டத்தில் 200க்கு மேற்பட்ட... Read more »
Ad Widget

பட்டப்பகலில் தொலைக்காட்சியை திருடிச்சென்ற திருடன்

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றிற்குள் நுளைழந்த திருடர்கள் பெறுமதிமிக்க தொலைக்காட்சி ஒன்றை திருடிச்சென்றுள்ளனர். குறித்த சம்பவம் நேற்றயதினம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், நேற்றயதினம் பாடசாலை வளாகத்திற்குள் உள்நுளைந்த திருடர்கள் அங்குள்ள வகுப்பறை கட்டம் ஒன்றின் கதவினை உடைத்து பெறுமதிக்க... Read more »

வவுனியாவில் கஞ்சாவுடன் குடும்பஸ்தர் கைது!

வவுனியா, புளியங்குளம் பகுதியில் மோட்டர் சைக்கிள் ஒன்றின் இருக்கைக்குள் மறைத்து கொண்டு செல்லப்பட்ட கஞ்சாவுடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிஸார் நேற்று (13) தெரிவித்தனர். வவுனியா, புளியங்குளம் பகுதியில் விசேட அதிரடிப் படையினர் விசேட சோதனை நடவடிக்கையை முன்னெடுத்திருந்த போது முல்லைத்தீவு... Read more »

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கதலைவிக்கு பிணை

வவுனியா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முற்ப்படுத்தப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவி சி.ஜெனிற்றா இன்று பிணையில் விடுவிக்கப்பட்டார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் வவுனியாவிற்கு விஜயம் செய்ததுடன் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற வன்னி மாவட்டங்களுக்கான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார். இதன்போது... Read more »

புளியங்குளத்தில் ஒரு கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

வவுனியா புளியங்குளத்தில் ஒரு கிலோ 350 கிராம் கஞ்சாவுடன் ஒருவரை கைது செய்துள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். புளியங்குளம் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்றையதினம் புளியங்குளம் பகுதியில் விசேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன்போது புதுக்குடியிருப்பில் இருந்து பொல்காவலைக்கு செல்லும்... Read more »

ஜனாதிபதி தேர்தல்: தமிழ் கட்சிகளுக்கு அழைப்பு

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து உறுதியான தீர்மானத்தை மேற்கொள்ளவேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ரெலோவின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வவுனியாவில் ரெலோ அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை... Read more »

அரசு சாதாரண மக்கள் மீது அடக்கு முறை பிரயோகிக்கிறது: துரைராசா ரவிகரன்

விடுதலைபுலிகளின் காலத்தில் அடக்குமுறைகள் இருக்கவில்லை. என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மீதான பொலிஸாரின் அடாவடித்தனத்தை கண்டித்தும், வவுனியா மாவட்ட தலைவி விடுதலை செய்யப்பட வேண்டும் என கோரி முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோர்களின் உறவுகளால்... Read more »

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவிக்கு தொடரும் விளக்கமறியல்

வவுனியா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் தலைவி சி.ஜெனிற்றாவின் விளக்கமறியல் வெள்ளிக்கிழமை வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த ஆண்டு இதே காலத்தில் 05ஆம் திகதி வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்டு நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற வன்னிமாவட்டங்களிற்கான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார்.... Read more »

ரணில் வருகையால் பயன் இல்லை : செல்வம் எம்.பி விமர்சனம்!

ஜனாதிபதியின் வவுனியா வருகையானது சம்பிரதாய பூர்வமான ஒரு நிகழ்வே தவிர அதனால் பயன் ஏதும் இல்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து... Read more »