விமானப்படை தளத்தை புகைப்படம் இளைஞன் கைது!

வவுனியா விமானப்படை தளத்தை புகைப்படம் எடுத்ததாக சந்தேகத்தின் பேரில் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி விசேட விமானத்தில் வவுனியா விமானப்படை தளத்திற்கு வருகை தந்து இன்று (05.01.2024) வன்னி அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளார்.

புகைப்படம் எடுத்த இளைஞர் கைது

இவ்வாறான சூழலில் பாதுகாப்பு வாகனத்தொடரணி சென்று கொண்டிருந்த நிலையில் அதனை இளைஞரொருவர் புகைப்படம் எடுத்தமையை அவதானித்த பாதுகாப்பு உத்தியோகத்தரொருவர் குறித்த இளைஞனை கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பூனாவ பகுதியை சேர்ந்த பைருஸ் பவாஹிர் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor