வவுனியாவில் இரவோடு இரவாக நிரந்தரமாக அமைக்கப்பட இராணுவ முகம்

வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக நிரந்தர இராணுவ முகாம் ஒன்று இரவோடு இரவாக அமைக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் நடைபெற்றபோது வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இராணுவ காவலரனொன்று அமைக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்தது.

அதன் பின்னரும் குறித்த காவலரண் அகற்றப்படாத நிலையில் இராணுவத்தினர் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு கனரக வாகனங்கள் சகிதம் வருகை தந்த இராணுவத்தினர் குறித்த பகுதியால் நிரந்தரமாக பாரியலவிலான இராணுவ முகாம் ஒன்றை அமைத்துள்ளனர்.

இதன் காரணமாக பயணிகளும் குறித்த பகுதியில் உள்ள பொதுமக்களும் அச்சத்துக்குள்ளாகியுள்ள நிலையில், வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கின்றனர்.

Recommended For You

About the Author: admin