வவுனியா, வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி வழிபாட்டின் போது, கைது செய்யப்பட்டவர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதாக குறித்த வழக்கில் முன்னிலையான சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட எட்டுபேர் மீதும் எந்தவிதமான தவறும் கிடையாது என்பதுடன்,... Read more »
வவுனியா, வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் மகாசிவராத்திரி தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 8 ஆம் திகதி விசேட பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதற்கு ஆலய நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இவ்வாறான நிலையில், மின்பிறப்பாக்கி இயந்திரங்களை பயன்படுத்தி நிகழ்வுகளை நடத்துவதானால், நீதிமன்றில் அனுமதி பெறப்படவேண்டும் என நெடுங்கேணி பொலிஸாரால்... Read more »
இந்தியாவில் சுகவீனமுற்ற நிலையில் உயிரிழந்த சாந்தனின் பூதவுடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று காலை வவுனியா போராளிகள் நலன்புரி சங்கத்திற்கு முன்பாகவும்,பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாகவும் வைக்கப்பட்டது இதனைதொடர்ந்து காலை 9 மணிக்கு மாங்குளத்திலும், காலை 10.30 இற்கு கிளிநொச்சியிலும் தொடர்ந்து 11.30 இற்கு இத்தாவில்... Read more »
சாந்தனின் இறுதி ஊர்வலம் மக்களின் கண்ணீர் வெள்ளத்தில் வவுனியாவில் ஆரம்பமானது. சாந்தனின் பூதவுடல் மக்கள் பெரும் வெள்ளத்திற்கு மத்தியில் வவுனியாவிலிருந்து, யாழ்ப்பாணத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. கிளிநொச்சியில் மக்கள் அஞ்சலிக்காக ஆயத்தமாகி வருகின்றனர். Read more »
சாந்தனின் நினைவேந்தலை ஜனநாயக ரீதியாக அனுஷ்டிப்பதற்கு அரசாங்கமும், பொலிசாரும் இடமளிக்க வேண்டும் என போராளிகள் நலன்புரிச் சங்க தலைவரும், முன்னாள் அரசியல் கைதியுமான செல்வநாயகம் அரவிந்தன் தெரிவித்துள்ளார். வவுனியா ஊடக அமையத்தில் இன்று (01) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது... Read more »
வவுனியா, வீரபுரம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து நேற்று (16) காலை இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இளம் குடும்பஸ்தர் வீட்டில் இருந்த கிணற்றுக்குள் குதித்துள்ளார். இதனையடுத்து, மனைவியும், பிள்ளைகளும் அயலில் உள்ளவர்களை... Read more »
வவுனியா நகர சபை மைதானத்தில் நடைப் பயிற்சிக்கு வருகை தந்தவரின் நகைகளைத் திருடிய சம்பவம் தொடர்பில் 32 வயது இளைஞர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார் என்று வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா, தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் நடைப் பயிற்சிக்காகக் கடந்த... Read more »
தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தெரியவந்துள்ளது. கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மாநாடு நடைபெறவுள்ளது. இதேவேளை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியானது முதல் ஒரு வருடத்திற்கு குகதாசனுக்கு... Read more »
வவுனியா – வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்திற்கு பௌத்த பிக்குகள் இன்று சென்றிருந்த நிலையில், அங்குள்ள ஆதிலிங்கேஸ்வரர் முன் பாதணிகளுடன் பௌத்த தேரர் ஒருவர் இருக்கும் புகைப்படங்கள் தமிழ் மக்கள் மத்தியில் சலசலபபை ஏற்படுத்தியுள்ளது. இதன்போது ஆலயத்தின் நிர்வாகத்தினரும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர். ஆலயம் அமைந்துள்ள... Read more »
பதினெட்டு (18) வருடங்களுக்கு முன்னர் தமிழ் இளைஞர் ஒருவர் காணாமல் போனமைக்கு இலங்கை இராணுவமே பொறுப்பு என நீதிமன்ற தீர்ப்பு ஒன்றின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஓமந்தை சோதனை சாவடியில் வைத்து காணாமல் போன தமிழ் இளைஞரான கந்தசாமி இளமாறன் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு... Read more »

