அரசாங்க அதிபருடன் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சந்திப்பு..!

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் இன்றைய தினம் (12.08.2025) காலை 09.00 மணிக்கு அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களை அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இதன் போது பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம், நெடுந்தீவின் வீதி புனரமைப்பு மற்றும் சுற்றுலா அபிவிருத்தி,... Read more »

50வருடங்களுக்கு பின்னர் உப்புக்டேணி குளம் தூர் வாரப்பட்டது..!

சாவகச்சேரி நகரசபையின் ஆளுகைக்கு உட்பட்ட உப்புக்கேணிக் குளம் சுமார் 50வருட காலத்திற்குப் பின்னர் சாவகச்சேரி நகரசபையினரின் முயற்சியால் தூர்வாரப்பட்டு அதிக நீரை கொள்ளக்கூடிய விதமாக அமைக்கப்படுகின்றது. சாவகச்சேரியின் பல்வேறு கிராமங்களில் இருந்தும் மாரி காலத்தில் வெள்ள நீர் உப்புக்கேணிக் குளத்தை வந்தடைந்து- மேலதிக நீர்... Read more »
Ad Widget

செம்மணி புதைகுழி விவகாரத்தில் அரசாங்கத்தின் தலையீடு இல்லை

செம்மணி புதைகுழி விவகாரத்தில் அரசாங்கத்தின் தலையீடு இல்லை – வெளிவிவகார அமைச்சர் உறுதி செம்மணி புதைகுழி விவகாரம் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்பதால், அதில் அரசாங்கம் எந்தவித தலையீடும் செய்யவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் விஜய ஹேரத் தெரிவித்துள்ளார்.   மன்னார் மற்றும்... Read more »

நீதியின் ஓலம்: கையொப்பப் போராட்டம்..!

நீதியின் ஓலம்” என்ற கையொப்பப் போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடுகையில். தமிழர்கள்மீது தொடர்ந்து நடைபெறும் இனவழிப்பின் சாட்சியாக, யாழ்ப்பாணம் செம்மணியில் அகழ்ந்தறியப்பட்ட மனிதப் புதைகுழிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட எலும்புத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன. செம்மணி மனிதப்... Read more »

கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லப்பட்டு தாக்கப்பட்ட இளைஞன்; சடலமாக மீட்பு

கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லப்பட்டு தாக்கப்பட்ட இளைஞன்; சடலமாக மீட்பு முத்தையன்கட்டு இராணுவ முகாமில் இருந்து இரும்புக் கழிவுகளை எடுத்துத் தருவதாகக் கூறி அழைத்துச் செல்லப்பட்ட நான்கு இளைஞர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டதாகவும், அவர்களில் ஒருவர் தப்பி ஓடிய நிலையில், காணாமல்போனதாகவும், பின்னர் முத்தையன்கட்டு குளத்தில் இருந்து... Read more »

ஜ.நா. கடிதம்: தமிழ்த் தேசியம் அழியும் அபாயம் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எச்சரிக்கை

யாழ்ப்பாணம்: ஐக்கிய நாடுகள் சபைக்கு (UN) கடிதம் அனுப்பும் விவகாரத்தில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழரசுக் கட்சி பொய்யுரைப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் தமிழ்க் கட்சிகளுக்கு இடையே இணக்கப்பாடு ஏற்படத் தவறினால் தமிழ்த் தேசியம் அழியும் எனவும்... Read more »

யாழ்ப்பாண தேவாலயங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை

யாழ்ப்பாணத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில், திருநாட்களின் போது வீதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வீதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்துவது, சமூகத்தில் உள்ளவர்களுக்கு பெரும் பிரச்சினையாக இருப்பதால், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் தெரிவித்தார். கடந்த 2016 ஆம்... Read more »

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் கடலில் மீன்பிடித்து திரும்பிய இளைஞன் வெட்டிக்கொலை..! மோப்பநாய் சகிதம் தீவிர தேடுதல்

கொக்குத்தொடுவாய் களப்பு கடலிற்கு தொழிலுக்கு சென்ற இளைஞன் இனந்தெரியாதோரால் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. கொக்குத்தொடுவாய் கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்திற்கு 300 மீற்றர் முன்பாக கொக்குத்தொடுவாய் களப்பு கடலில் 07.08.2025 இரவு தொழிலுக்கு சென்ற இளைஞன் இன்று (08) அதிகாலை... Read more »

யாழில் நகரப் பகுதி குளமொன்றில் நபரொருவரின் சடலம் மீட்பு..!

யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் உள்ள புல்லுகுளத்தில் இன்று (08) மாலை சடலமொன்று இனங்காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். திருவள்ளுவர் பண்பாட்டு மையத்திற்கு அருகில் உள்ள குறித்த குளத்தில் சடலம் மிதப்பதாக பொலிஸாருக்கு மாலை 5:30 மணியளவில் தகவல் கிடைத்ததை அடுத்து, யாழ்ப்பாணம் பொலிஸாரும் தடயவியல் பொலிஸாரும்... Read more »

சுன்னாகத்தில் 500 போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது

யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸார் நேற்று இரவு சுன்னாகம் பகுதியில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின்போது 500 போதை மாத்திரைகளைக் கைப்பற்றியுள்ளனர். யாழ். பொலிஸ் அத்தியட்சகர் பிரிவின் கீழ் இயங்கும் சுன்னாகம் விசேட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.... Read more »