வெளிநாட்டவருக்கு விசா

வௌிநாட்டவர்கள் இந்நாட்டுக்கு வரும் போது 30 நாட்களுக்கான விசாவுக்காக ஒருவரிடம் அறவிடப்பட்ட 50 டொலர்கள் என்ற பழைய கட்டணத்தை தொடர்ந்தும் பராமரிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன், இந்தியா, சீனா, ரஷ்யா, ஜப்பான், மலேசியா, தாய்லாந்து... Read more »

ரணில், பசில் தரப்பை இந்தியாவுக்கு அழைக்கும் மோடி

இந்தியாவில் மக்களவை (லோக்சபா) தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. ஆளுங்கட்சியான பாரதிய ஜனதா கட்சித் தலைமையிலான கூட்டணி மற்றும் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கும் இடையில் கடும் போட்டி நிலவுவதாக இந்திய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. கடந்த ஏப்ரல் 19ஆம் திகதி... Read more »
Ad Widget

பொதுமக்கள் முன்னிலையில் விவாதத்தை நடத்தவும்

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி எனும் இரு கட்சிகளினிடையே ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விவாதம் தற்போது அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இலங்கை அரசியல் வரலாற்றில் அதிகளவிலான விவாதங்கள் தொடர்பில் நாம் கேள்விப்பட்டிருப்போம். பார்த்திருப்போம். நாடாளுமன்றத்தில் கூட நிதி மற்றும் நேரம்... Read more »

கட்டுநாயக்க விமான நிலைய சர்ச்சை: அரசாங்கம் விளக்கம்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் விசா வழங்கும் சர்ச்சைக்குரிய VFS நிறுவனம் இந்திய நிறுவனம் அல்ல என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். VFS என்பது பெரும்பாலும் பிளாக் ஸ்டோன் குழுமத்திற்கு சொந்தமான ஒரு சர்வதேச நிறுவனம் என்றும், அதன்... Read more »

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கூச்சலிட்ட பயணியை காணவில்லை

விசா வழங்குவதில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அண்மையில் கூச்சலிட்ட பயணி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் தலைமையக வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பயணியிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட... Read more »

பெற்ற பிள்ளைகளை பணயக்கைதிகளாக சிறைபிடித்த தந்தை

ஹங்வெல்ல பிரதேசத்தில் தனது இரண்டு பிள்ளைகளை பணயக்கைதிகளாக வைத்திருந்த தந்தையொருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (05) இரவு ஹங்வெல்ல, ஜல்தாரா, அரச ஊழியர் வீட்டுத் தொகுதியில் வசிக்கும் நபர் ஒருவர், மனைவியைக் கொலைசெய்வதற்கு கைக்குண்டுடன் தனது... Read more »

தத்துக் கொடுக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

பொருளாதார நெருக்கடி காரணமாக பெற்றோர்கள் தமது குழந்தைகளை தத்துக் கொடுக்கின்றமை அதிகரித்து வருவதாக மதிப்பீடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. ஆண்டொன்றிற்கு சராசரியாக 1700 குழந்தைகள் தத்துக் கொடுக்கப்படுவதாக பதிவாளர் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பதிவாளர் நாயகம் லக்ஷிகா கணேபொல தெரிவித்துள்ளார். பெற்றோர்கள் குழந்தைகளை ஏனோயோருக்கு வழங்குதல் தொடர்பான... Read more »

பாதுகாப்பைக் கோரும் எதிர்க்கட்சி : ஜனநாயகத்துக்கு விழும் மரண அடி

அரசாங்கத்திலிருந்து எதிர்க்கட்சிக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்க எதிர்க்கட்சியின் குழுவொன்று தயாராகவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று அண்மையில் உள்ளக கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது. தன் உயிருக்கு அச்சுறுத்தலாகும் வகையில் யாரோ... Read more »

க.பொ.த. சாதாரணதர பரீட்சை இன்று

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை இன்று (06) ஆரம்பமாகின்றது. நாடளாவிய ரீதியில் 3,527 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளது. மொத்தமாக 452,979 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றுகின்ற நிலையில், 387,648 பாடசாலை விண்ணப்பதாரர்களும், 65,331 தனியார் விண்ணப்பதாரர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »

குற்றச்சாட்டுகளை கோட்டாபய ராஜபக்‌ஷவினால் மறுக்க முடியாது: கர்தினால்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ 2021 ஆம் ஆண்டு தம்முடன் தொலைபேசியில் உரையாசிய போது கூறிய விடயங்களை மறுக்க முடியாது என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். இதன்படி, ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த முடியாது எனவும், ஏனெனில் தனக்கு... Read more »