பெற்ற பிள்ளைகளை பணயக்கைதிகளாக சிறைபிடித்த தந்தை

ஹங்வெல்ல பிரதேசத்தில் தனது இரண்டு பிள்ளைகளை பணயக்கைதிகளாக வைத்திருந்த தந்தையொருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (05) இரவு ஹங்வெல்ல, ஜல்தாரா, அரச ஊழியர் வீட்டுத் தொகுதியில் வசிக்கும் நபர் ஒருவர், மனைவியைக் கொலைசெய்வதற்கு கைக்குண்டுடன் தனது வீட்டிற்கு வந்துள்ளார்.

எனினும் அந்த நேரத்தில் குறித்த பெண் வீட்டை விட்டு ஓடியதையடுத்து குறித்த நபர் தனது இரண்டு பிள்ளைகளையும் வீட்டின் அறையொன்றில் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளார்.

10 வயது சிறுமியும், இரண்டு வயது ஆண் குழந்தையும் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து ஹங்வெல்ல பொலிஸ் அதிகாரிகள் குழு மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவின் அதிகாரிகள் குழு சம்பவ இடத்திற்கு சென்று நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சுமார் ஒன்பது மணித்தியாலங்களின் பின்னர் சிறுவர்களை பத்திரமாக மீட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குறித்த நபரை கைது செய்துள்ளதாகவும், மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர் ஹன்வெல்ல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin