போராட்டத்தில் தீக்கிரையாக்கப்பட்ட ஞானக்காவின் வீட்டிற்கு அரசாங்கம் 28 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்கியுள்ளது.

2022 ஆம் ஆண்டில் நாட்டில் ஏற்பட்ட அரகலய போராட்டத்தின் போது ஜோதிடர் ஞானக்காவின் வீடு மற்றும் புனித தலத்திற்கு ஏற்பட்ட சேதத்திற்காக முன்னாள் அரசாங்கம் 28 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்கியுள்ளது என ஆளும் கட்சி தலைமை அமைப்பாளர் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.... Read more »

மன்னார் திருக்கேதீஸ்வரம் சிவன் ஆலயத்தில் சிறப்பாக இடம் பெற்ற மகா சிவராத்திரி பூஜை வழிபாடுகள்(video) .

மகா சிவராத்திரியை முன்னிட்டு பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றாக காணப்படும் வரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார் திருக்கேதீஸ்வரம் சிவாலயத்தில் நேற்றைய தினம் (26.02)புதன் கிழமை   விசேட பூஜை வழிபாடுகள் கோலாகலமாக நடைபெற்றன. சிறப்பான முறையில் ஆறு சாம பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. இதன்போது ஆலய முன்றலில்... Read more »
Ad Widget

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ் மன்னார் விஜயம்(video) .

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் பெண்கள் பங்களிப்பு தொடர்பில் ஆராயும் நோக்கில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ் நேற்றைய தினம்(26.02) மன்னாருக்கு வருகை தந்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் மன்னார் அலுவலகத்தில் மன்னார்... Read more »

முன்னாள் ஜனாதிபதிகளின் வெளிநாட்டு பயண செலவுகள் வெளிப்படுத்தினார் பிரதமர் ஹரிணி

கடந்த 15 ஆண்டுகளில் இலங்கை ஜனாதிபதிகளின் வெளிநாட்டு பயணங்களுக்கான செலவினங்களை பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (27) நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தினார். ஒவ்வொரு ஜனாதிபதியும் தங்கள் பதவிக்காலத்தில் செய்த செலவினங்களின் விரிவான விவரங்களை அவர் வழங்கினார். 2010 முதல் 2014 வரை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்... Read more »

சஞ்சீவவை சுட்டுக் கொன்றவர் தான் கைது செய்யப்படாரா என்பது குறித்து விசாரணை.

மஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் சாட்சி கூண்டில் பாதாள உலக கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்தான் இந்த கொலையை செய்தாரா என்பதில் சிறிய சந்தேகம் கூட எழாமல் இருக்க அன்று துப்பாக்கி சூடு நடத்தியவர் கைது செய்யப்பட்ட நபரா... Read more »

கெஹெல்பத்தர பத்மவின் முழு குடும்பத்தையும் கொலை செய்ய முயற்சி.

பாதாள உலகத் தலைவராக இருந்த கணேமுல்ல சஞ்சீவை கொலை செய்ய துபாயில் இருந்து உத்தரவிட்டதாக கூறப்படும் பாதாள உலகத் தலைவராக கருதப்படும் கெஹெல்பத்தர பத்மவின் மனைவி, அவரது தாய், தந்தை மற்றும் சகோதரர் ஆகியோரை குளியாப்பிட்டிய, பன்னல பகுதியில் உள்ள வீட்டில் கொலை செய்ய... Read more »

15 சதவீத புதிய வரி காரணமாக தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறும் அபாயம்!

தகவல் தொழில்நுட்பம், சமூக ஊடகம் மற்றும் இணையம் மூலம் ஃப்ரீலான்ஸர்களாக நாட்டிற்கு டொலர்களை சம்பாதிக்கும் சேவைகளுக்கு 15 சதவீத வரி விதிப்பதால், சேவை ஏற்றுமதித் துறையில் உள்ள வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய முடிவுகளால் படிப்படியாக முன்னேறி வரும் தகவல்... Read more »

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம் இலங்கை மீது குறைவான கவனம் செலுத்துகிறது -ரணில் விக்ரமசிங்க.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் , உக்ரைன் மற்றும் இலங்கையை வெவ்வேறு விதமாக நடத்துவதன் மூலம் இரட்டை நிலைப்பாட்டை கடைப்பிடிக்கிறது என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறினார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம் இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை தொடர்பாக... Read more »

கடும் காற்றால் அள்ளுண்டுச்சென்ற கூரைகள்!

கம்பளை – புப்புரஸ்ஸ, போமன்ட் மத்திய பிரிவில் நேற்றிரவு வீசிய கடும் காற்றால் வீடுகளின் கூரைகள் அள்ளுண்டுச்சென்றன. இரு வீடுகளின் கூரைகளே இவ்வாறு முற்றாக அள்ளுண்டுச்சென்றுள்ளன. இதனால் இரு குடும்பங்களைச் சேர்ந்த 9 பேர் தற்போது உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர். Read more »

பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு மத்திய மாகாணத்தில் இயங்கும் தமிழ் பாடசாலைகளுக்கும் நாளை 27ஆம் திகதி விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்வி திணைக்களம் அறிவித்துள்ளது. அன்றைய நாளுக்குரிய கல்வி செயற்பாடுகளை மார்ச் மாதம் 1 ஆம் திகதி சனிக்கிழமை நடத்த வேண்டும்... Read more »