பிரித்தானியாவில் வதந்தியால் பரவிய வன்முறை

பிரித்தானியாவில் சிறுமிகள் மூவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பரவிய வதந்தியால் நாட்டின் முக்கிய நகரங்களில் வரலாறு காணாத வன்முறை வெடித்துள்ளது. வன்முறையை கட்டுப்படுத்த பொலிஸார் கடும் முயற்சிகள் மேற்கொண்டுள்ள போதிலும், பொலிஸார் மீதும் கடுமையான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 29ஆம் திகதி நடன... Read more »

பங்களாதேஷில் இடைக்கால அரசாங்கம்: தலைமைத்தாங்க நாடு திரும்பினார் முஹம்மது யூனுஸ்

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முஹம்மது யூனுஸ், இடைக்கால அரசாங்கத்திற்கு தலைமை தாங்குவதற்காக இன்று வியாழக்கிழமை பங்களாதேஷுக்குத் திரும்பியுள்ளார். பல வாரங்களாக மாணவர்கள் நடத்திய போராட்டங்களால், பிரதமர் ஷேக் ஹசீனா இராஜினாமா செய்துவிட்டு இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.... Read more »
Ad Widget

ஜப்பானில் பாரிய நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு

ஜப்பானில் வியாழக்கிழமை (ஓகஸ்ட் 8) சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 7.1 நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGC) அறிக்கையில் தெரிவித்துள்ளது. தென்மேற்கு ஜப்பானிய தீவுகளான கியுஷு மற்றும்... Read more »

கனடா துப்பாக்கிச் சூடு: இருவர் உயிரிழப்பு

கனடாவின் ஸ்ட்ராட்ஃபோர்ட் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் சம்பவ இடத்தை சென்றடைந்த போது துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் நால்வர் மீட்கப்பட்டனர். ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனையவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.... Read more »

இஸ்ரேல் மீது தொடரும் தாக்குதல்: போர்ப்பதற்றம்

லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பு வடக்கு இஸ்ரேலை குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் மத்தியக்கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. அண்மையில் இஸ்ரேலிய தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் உயிரிழந்ததற்கு, இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கப்போவதாக ஹிஸ்புல்லா அமைப்புக்கள் எச்சரிக்கை விடுத்திருந்தன. குறித்த ஏவுகணைத்... Read more »

மத்திய கிழக்கில் போர்க்கப்பல்கள், விமானங்கள் குவிப்பு

மத்திய கிழக்கில் வன்முறை அதிகரித்துள்ள நிலையில் இஸ்ரேலை முடிந்தவரை பாதுகாப்பதற்கு இராணுவ உதவிகளை அதிகப்படுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உறுதியளித்துள்ளார். ஹமாஸ், ஹிஸ்புல்லா மற்றும் ஹவுதிகள் உட்பட ஈரானின் அனைத்து அச்சுறுத்தல்களில் இருந்தும் இஸ்ரேலை பாதுகாப்பதற்காக அமெரிக்கா தனது படைகளை மத்திய கிழக்கில்... Read more »

கமாலா ஹாரிஸின் பாரம்பரிய புகைப்படத்தை பகிர்ந்த ட்ரம்ப்

அமெரிக்காவில் நவம்பர் மாதம் 05 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிராதான வேட்பாளர்களான முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜனநாயகக் கட்சி சார்பாக போட்டியிடும் கமலா ஹாரிஸ் இடையேயான பிரச்சாரங்கள் தீவிரமடைந்துள்ளன. அமெரிக்காவில் நவம்பர் மாதம் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில்... Read more »

பரிஸ் ஒலிம்பிக்குக்கு எதிராக சதித் திட்டம்: போட்டிகளுக்கு பாதிப்பா?

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கடந்த சனிக்கிழமை ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கடந்த சனிக்கிழமை போட்டி ஆரம்பமான போது பிரான்ஸ் நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் பிரதான ரயில் வழித்தடங்களில் ஒரே நேரத்தில் திட்டமிட்டு தீ வைக்கப்பட்டது.... Read more »

இலங்கை உட்பட 55 நாடுகளுக்கு இலவச விசா

இலங்கை, மலேசியா, மாலைத்தீவு உள்ளிட்ட 55 நாடுகளுக்கு இலவச விசா திட்டத்தினை அல்ஜீரியா (Algeria) அறிமுகப்படுத்தியுள்ளது. வட ஆபிரிக்க நாட்டின் சுற்றுலாத்துறையானது புதிய விசா அற்ற பயணக் கொள்கையை அறிமுகப்படுத்தியதன் மூலம் குறிப்பிடத்தக்க எழுச்சியை அனுபவித்து வருவதாகக் கூறப்படுகிறது. அத்துடன், இந்த கொள்கையானது சுற்றுலாவைத்துறையை... Read more »

கலிஃபோர்னியாவில் மிகப் பெரிய காட்டுத் தீ

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தை மிகப் பெரிய காட்டுத் தீ உலுக்கி வருகிறது. கலிஃபோர்னியாவின் வடக்குப் பகுதியில் காட்டுத் தீ மிக வேகமாகப் பல இடங்களுக்குப் பரவி வரும் நிலையில், அப்பகுதியிலிருந்து 4,000க்கும் மேற்பட்டோர் வெளியேறியுள்னர். இது ஒருபுறம் இருக்க, தீயை அணைக்க தீயணைப்பாளர்கள் கடுமையாகப்... Read more »