மூன்று மாதத்திற்குள் இந்திய படைகள் வெளியேறும்: மாலைத்தீவு ஜனாதிபதி

2024 மே மாதத்திற்குள் மாலைத்தீவில் இருந்து இந்திய படைகள் வெளியேறும் என்று அந்நாட்டு ஜனாதிபதி முகம்மது மொய்சு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். சீன ஆதரவாளராக மாலைத்தீவு ஜனாதிபதி அந்நாட்டின் ஜனாதிபதியாக பதிவியேற்றதிலிருந்து இந்திய படைகளை வெளியேற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில், நேற்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில்... Read more »

பிரான்ஸில் அதிகரிக்கும் எரிவாயு கட்டணம்

பிரான்ஸில் உள்ள குடும்பங்கள் எதிர்வரும் ஜூலை மாதத்தில் எரிவாயு கட்டண அதிகரிப்பை எதிர்கொள்ள வேண்டிவரும் என அந்த நாட்டு எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையகம் தெரிவித்துள்ளது. இதன்படி, எரிவாயு கட்டணம் 5.5 முதல் 10.4 வீதம் அதிகரிக்கும் என எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையகம் அறிவித்துள்ளது. இதற்கமைய,... Read more »
Ad Widget

பிரித்தானிய மன்னர் புற்றுநோயால் பாதிப்

பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. 75 வயதான மன்னர், சமீபத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு புராஸ்டேட் சுரப்பி வீக்கம் அறுவை சிகிச்சைக்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று வெளியான தகவலில், மன்னருக்கு மேற்கொள்ளப்பட்ட உடற் பரிசோதனையில் அவருக்கு... Read more »

தென் கொரியாவுக்கும் சவுதிக்கும் இடையில் பாதுகாப்பு புரிந்துணர்வு உடன்படிக்கை

நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் சவுதி அரேபியா தென்கொரியாவுடன் நேற்று பாதுகாப்பு சம்பந்தமான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைய தென் கொரியா, சவுதிக்கான தனது ஆயுத விற்பனையை அதிகரிக்கலாம். அத்துடன் புரிந்துணர்வு உடன்டிக்கைக்கு அமைய ஆயுதங்கள் தொடர்பான ஆராய்ச்சி, அபிவிருத்தி,... Read more »

கனடாவிலிருந்து வெளியேறும் புலம்பெயர்ந்தோர்

கனடாவுக்கு புலம்பெயர்ந்தவர்களில் 15 சதவிகிதத்துக்கும் அதிகமானோர், புலம்பெயர்ந்து, நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்ற 20 ஆண்டுகளுக்குள், வேறு நாடுகளுக்கோ அல்லது சொந்த நாட்டுக்கோ திரும்புவதாக ஆய்வொன்றின் முடிவுகள் தெரிவிக்கின்றன. கனடாவின் புள்ளியியல் துறை, 1982 முதல் 2017 வரை கனடாவுக்கு புலம்பெயர்ந்தோரில் கனடாவிலிருந்து வெளியேறியோர்... Read more »

விண்வெளியில் அதிக நாட்கள் தங்கியிருந்து சாதனை படைத்த ரஷ்யர்

ரஷ்யாவை சேர்ந்த விண்வெளி வீரரான Oleg Kononenko விண்வெளியில் நீண்ட நாட்கள் தங்கியவர் என்ற சாதனை படைத்துள்ளார்.59 வயதான Oleg Kononenko சுமார் இரண்டரை ஆண்டுகளை விண்வெளியில் தங்கியிருந்தார். ஏற்கனவே மற்றுமொரு ரஷ்ய விண்வெளி வீரரான Gennady Padalka 878 நாட்களும் 11 மணி... Read more »

மின்டனா மாநிலம் தனிநாடாக பிரியும்: பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி

பிலிப்பைன்ஸின் மின்டனா மாநிலத்தை தனி நாடாக பிரிக்க போவதாக அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி Rodrigo Duterte எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி Ferdinand Marcos Jr பிலிப்பைன்ஸ் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டால், மின்டானாவ் மாநிலம் தனிநாடாக அறிவிக்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி Rodrigo... Read more »

அவுஸ்திரேலிய எழுத்தாளருக்கு சீனா ஒத்திவைக்கப்பட்ட மரண தண்டனை

உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைதான அவுஸ்திரேலிய எழுத்தாளர் யாங் ஹெங்ஜுனுக்கு 5 ஆண்டுகளின் பின்னர் சீன நீதிமன்றம், மரண தண்டனையை ஒத்தி வைத்துள்ளது. அவுஸ்திரேலிய அதிகாரிகளின் கூற்றுப்படி, தண்டனை இரண்டு ஆண்டுகளின் பின்னர், அவரது நன்னடத்தை அடிப்படையில் ஆயுள் தண்டனையாக மாற்றப்படலாம். யாங் ஹெங்ஜுன்... Read more »

அமெரிக்காவின் டென்வரில் இரண்டு பேர் சுட்டுக்கொலை

அமெரிக்கா கொலராடோ மாநிலத்தின் தலைநகர் டென்வரில் நேற்று காலை நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். குடியிருப்பு பகுதியான Green Valley Ranchல் நேற்று அதிகாலை 2.30 அளவில் நடந்த இந்த சம்பவத்தில் 6 பேர் காயமடைந்த நிலையில்,வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார்... Read more »

‘இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும்’: புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்

இலங்கையின் சுதந்திர தினமான இன்று பிரித்தானியாவில் கறுப்புக்கொடி ஏந்தி தமிழர்களால் எதிர்ப்பு வெளியிடப்பட்டது. இலங்கையின் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர தின நிகழ்வுகள் இலங்கை தீவின் பல பாகங்களிலும் நடைபெற்றது. ஆனால் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு மற்றும் புலம்பெயர் தமிழர்கள் வாழும்... Read more »