இத்தாலி மருத்துவமனையில் திடீர் தீப்பரவல்!

இத்தாலியின் டிவோலி நகரில் உள்ள மருத்துமனையொன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் மூன்று வயோதிபர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீப்பரவலையடுத்து, கர்ப்பிணிப் பெண்ணொருவர், குழந்தைகள் உட்பட சுமார் 200 பேரை மருத்துவமனையில் இருந்து வெளியேற்றுவதற்கு இத்தாலிய தீயணைப்புப் படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வெளியேற்றப்பட்டவர்கள் சிகிச்சைக்காக ரோம் நகரை அண்மித்த பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 76 முதல் 86 வயதுகளுக்கு உட்பட்டவர்கள் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Recommended For You

About the Author: webeditor