50 ஆண்டுகளாக தண்ணீர், குளிர் பானங்களை குடித்து வாழ்ந்து வரும் மூதாட்டி

வியட்நாமில் தண்ணீர் மற்றும் கூல் ட்ரிங்ஸ் குடித்து 75 வயது மூதாட்டி ஒருவர் உயிர் வாழ்ந்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

வியட்நாமை சேர்ந்த 75 வயது யுய் தி லொய் எனும் மூதாட்டி கடந்த 50 வருடங்களாக தண்ணீர் மற்றும் குளிர் பானங்களை மட்டும் குடித்து உயிர் வாழ்ந்து வருகின்றார்.

மேலும்,1963ம் ஆண்டு யுய் தி லொய்-ஐ மின்னல் தாக்கி விபத்துக்குள்ளான பிறகில் இருந்து உணவு உண்ணும் பழக்கத்தை அவர் கைவிட்டுள்ளார்.

இந்த விபத்துக்கு பிறகு யுய் தி லொய்க்கு உணவின் வாசனையே மிகப்பெரிய குமட்டலை ஏற்படுத்தியதால் உணவு உண்ணும் பழக்கத்தையே கைவிட்டுள்ளார்.

குறிப்பாக தனது குடும்பத்தினருக்காக சமைக்கும் போது கூட அதன் சுவையை யுய் தி லொய் சரிப்பார்ப்பது இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor