தாய்லாந்து மன்னராட்சியை விமர்சித்த நபர்: 50 ஆண்டுகள் சிறை

தாய்லாந்து நாட்டின் மன்னராட்சியை அவமதித்து விமர்சித்த நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 50 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. கடுமையான சட்டங்கள் நடைமுறையில் இருக்கும் தாய்லாந்தில் இவ்வாறான கடுமையான தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல் முறை என மனித உரிமைக் குழுக்கள் தெரிவித்துள்ளன. அரசியல் உரிமை... Read more »

அணுவாயுத திறன் கொண்ட ஆளில்லா விமானத்தை பரிசோதித்தது வடகொரியா

வடகொரியா தொடர்ந்தும் தனது அணு ஆயுதங்களின் திறனை அதிகரித்து வரும் நிலையில்,மேற்கு கடல் பகுதியில் அணுசக்தி திறன் கொண்ட ஆளில்லா விமானத்தை அண்மையில் பரிசோதித்ததாக நேற்று (19) அறிவித்துள்ளது. துறைமுகங்கள் மற்றும் போர்க்கப்பல்களை அழிக்கும் திறன் இந்த ஆளில்லா விமானத்திற்கு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »
Ad Widget

செங்கடல் போர் : பொருளாதார நெருக்கடியில் சிக்கப்போகும் உலக நாடுகள்

சூயஸ் கால்வாய் மற்றும் பனாமா கால்வாய் மூலமான போக்குவரத்து நெருக்கடி உலகளாவிய வர்த்தக விநியோகச் சங்கிலியை சீர்குலைத்துள்ளது. சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது கடந்த 2021 மார்ச் மாதம் மிகப்பெரிய கொள்கலன் கப்பல்களில் ஒன்று, மிகவும் பரபரப்பான கப்பல் பாதைகளில் பிரதானமாக கருதப்படும்... Read more »

ஆய்வக இறைச்சியை எதிர்க்கும் ஐரோப்பிய நாடுகள்

ஆய்வக இறைச்சி உற்பத்தி முறைமைக்கு பிரான்ஸ், அவுஸ்திரேலியா மற்றும் இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் சில எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளன. இதன்படி, ஆய்வக இறைச்சி உற்பத்தி முறையானது, இயற்கை உணவு உற்பத்தி முறைமைக்கு அச்சுறுத்தல் என குறித்த நாடுகள் தெரிவித்துள்ளன. இந்த நடைமுறைகள் முதன்மை பண்ணை... Read more »

மந்தகதியில் நகரும் மலேசிய பொருளாதாரம்

மலேசிய பொருளாதாரம் கடந்த ஆண்டு நான்காவது காலாண்டில் எதிர்பார்த்த அளவுக்கு வேகமெடுக்கவில்லை. சீனாவுக்கான ஏற்றுமதி குறைந்ததே இதற்கு முக்கிய காரணம் என மலேசிய பொருளியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த பொருளாதாரம் மீட்சியடைய இன்னும் பல காலம் பிடிக்கும் என்பதையே இது சுட்டிக்காட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. முன்னைய... Read more »

வடகொரியா நீருக்கடியில் அணுவாயுத சோதனை

இந்த வாரம் அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் மேற்கொண்ட கூட்டுப் பயிற்சிகளுக்கு பதிலடியாக வட கொரியா தனது நீருக்கடியிலான அணு ஆயுத அமைப்பு சோதனையை நடத்தியுள்ளது. அணு ஆயுதத்தை சுமந்து செல்லக்கூடிய நீருக்கடியில் ஆளில்லா ஏவுகணை கிழக்கு கடற்கரையில் சோதனை செய்யப்பட்டதாக வடகொரிய... Read more »

அதியுச்ச பாதுகாப்பில் இஸ்லாமாபாத்

பிரிவினைவாத பலூச் தீவிரவாதிகளை குறிவைத்து ஈரானுக்குள் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளதால் இஸ்லாமாபாத் அதியுச்ச எச்சரிக்கையில் இருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் தீவிரவாத நடமாட்டம் உள்ள சில பகுதிகளில் ஈரான் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரானில் உள்ள பயங்கரவாதிகளின் மறைவிடங்கள்... Read more »

பறக்கும் போது தீப்பிடித்து எரிந்த விமானம்: அவசரமாக தரையிறக்கப்பட்டது

அமெரிக்காவின் எட்லஸ் ஏர் போயிங் சரக்கு விமானம் வானில் பறந்துக்கொண்டிருந்த போது தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனையடுத்து அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. எட்லஸ் ஏர் போயிங் 747-8 சரக்கு விமானம் ஃபுக்டோரிகாவுக்கு புறப்பட்டுச் சென்றது. எனினும் வானில் பறக்க ஆரம்பித்து சிறிது நேரத்தில் இயந்திரத்தில்... Read more »

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று இன்று பிற்பகல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 6.4 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. 71 கடல் மைல்கள் (115 கிமீ) தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் தொடர்பில் எவ்வித... Read more »

செங்கடலில் ரஷ்ய, சீனக் கப்பல்கள் பாதுகாக்கப்படும்: ஹூதி கிளர்ச்சியாளர்கள்

செங்கடலில் ரஷ்ய, சீனக் கப்பல்கள் பாதுகாப்பாகச் சென்றுவரும் என ஹூதி கிளர்ச்சி படையின் மூத்த அதிகாரி முகமது அல்-புக்கைதி தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் நாளேடு ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். “ரஷ்யா, சீனா உள்ளிட்ட பிற நாடுகளின் கப்பல்களுக்கு செங்கடல் வட்டாரத்தில்... Read more »