சம்பள அதிகரிப்பு தொடர்பில் மத்திய வங்கி விளக்கம்

இலங்கை மத்திய வங்கி, ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் கடந்த நாடாளுமன்ற அமர்வுகளின் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. மத்திய வங்கி அதன் செயற்பாடுகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றுக்கான உறுதிப்பாட்டை இன்று வெளியிடப்பட்ட அறிக்கையினூடாக வலியுறுத்தியுள்ளது. இலங்கை... Read more »

குருநாகல் வைத்தியசாலையில் மர்மமான உயிரிழப்புகள்

குருநாகல் போதனா வைத்தியசாலையின் சிறுநீரக நோயாளர்களுக்கான இரத்த சுத்திகரிப்பு பிரிவில் மர்மமான முறையில் இடம்பெற்ற உயிரிழப்புகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. டயாலிசிஸ் பிரிவில் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து ஐந்து உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மஹிபால, தெரிவித்துள்ளார். டயாலிசிஸ் என்றால்... Read more »
Ad Widget

செயலிழந்து கிடக்கும் அரசாங்க தொலைபேசி இணைப்புகள்

அரச நிறுவனங்கள் என்பன பொதுமக்களுக்கு தேவையான நேரத்தில் அவர்களுக்கான சேவைகளை வழங்கக்கூடிய வகையில் அமைக்கப்பட்டவை ஆகும். எனினும், கடைமையை சரிவர செய்யத் தவறிய , செயலற்ற தன்மையுடன் செயற்பட்டு வரும் அரச சேவைகளைப் பற்றி ஆராயப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இலங்கை தீவில் அரசாங்க சேவைகளை... Read more »

இந்திய மீனவர்கள் கலந்துகொள்ளாத கச்சைதீவு அந்தோனியார் திருவிழா!

தமிழக மீனவர்கள் இம்முறை கச்சைதீவு அந்தோனியார் திருவிழாவில் கலந்துகொள்ளவில்லை. இலங்கைக் கடற்படையினர் தம்மைக் கைது செய்வதாகவும் தமது மீன்பிடிப் படகுகளை சேதப்படுத்துவதாகவும் குற்றம் சுமத்தியே இம் முறை திருவிழாவில் பங்குகொள்ளவில்லை. சுமார் 3500 பேர் திருவிழாவில் பங்குபற்றியதாக யாழ்.மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம்... Read more »

இந்தியா உட்பட 20 நாடுகளின் இரகசியங்களை திருடிய சீனா ஆதரவு ஹேக்கர்கள்

சீனாவை சேர்ந்த ஹேக்கர்கள் வெளிநாட்டு அரச நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் மீது சைபர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன் மூலம் இந்தியா மற்றும் ஏனைய நாடுகளில் இருந்து இரகசிய தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. சீன அரசின் ஆதரவு பெற்ற ஹேக்கிங் அமைப்பு ஒன்றின் முக்கிய... Read more »

சர்வதேச சட்டங்களை ஆராயாமல் கட்சி மோதல்களில் ஈடுபடும் தமிழ்த் தரப்பு

இஸ்ரேல் – பலஸ்தீன பிரதேசங்களை ஆக்கிரமிப்புச் செய்துள்ளதன் சட்டபூர்வத் தன்மை பற்றி ஆராய்ந்து சட்டப் பொருள் கோடல்களைப் பரிந்துரைக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை சர்வதேச நீதிமன்றத்திடம் கோரிய சட்ட விளக்கம் பற்றிய விவாதம் தற்போது நடைபெற்று வருகின்றது. சென்ற செய்வாய்க்கிழமை அமெரிக்காவும்... Read more »

சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் டிக்டொக்,இன்ஸ்டாகிராம் போன்ற சமூக தளங்களில் கணக்கு வைத்திருப்பதை தடை செய்யும் சட்டமூலம் மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்காவில் சிறுவர்களை சமூக ஊடகங்களிடம் இருந்து விலக்கி வைக்கும் முதல் மாநிலமாக புளோரிடா மாறியுள்ளது. கடந்த... Read more »

சீன ஆய்வுக் கப்பல் அச்சத்தில் இந்தியா, இலங்கை வழங்கிய உறுதிப்பாடு

மாலைத்தீவு கடற்பரப்பில் சீன ஆராய்ச்சிக் கப்பல் ஒன்று நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் பாதுகாப்புக் கவலைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்காக தனது பிரதேசத்தை எந்தவொரு மூன்றாம் நாடும் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கான தனது உறுதிப்பாட்டை இலங்கை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. புதுதில்லியில் நடைபெற்று வரும் மாநாடு ஒன்றில் பேசிய, வெளிநாட்டு... Read more »

மாலைத்தீவில் நிறுத்தப்பட்டது சீன ஆய்வு கப்பல்

இந்தியாவின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் சர்ச்சைக்குரிய சீன ஆராய்ச்சிக் கப்பல் மாலைத்தீவில் நங்கூரமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள புவிசார் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் சீனக் கப்பல் மாலைத்தீவு சென்றுள்ளதுடன், மாலைத்தீவு இந்தியாவுடன் முரண்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் மாலேக்கு அருகிலுள்ள திலாஃபுஷி தொழில்துறை துறைமுகத்தில் சீனாவின்... Read more »

அலக்ஸி நவல்னியின் உடல் தாயாரிடம் ஒப்படைப்பு

சிறைச்சாலையில் மர்மமான முறையில் மரணமடைந்த ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலக்ஸி நவல்னியின் உடல் அவரது தாயாரிடம் நேற்று சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டுள்ளது. நவல்னி சிறையில் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் அவரது உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி புட்டினால் நவல்னி கொல்லப்பட்டதாக அவரது குடும்பத்தினர் மற்றும்... Read more »