இலங்கைக்கு பயணத் தடை எதுவும் விதிக்கவில்லை – அமெரிக்க தூதுவர்!

இலங்கைக்கான பயணத் தடை எதுவும் விதிக்கப்படவில்லை என அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் (Julie Chung) தெளிவுபடுத்தியுள்ளார்.

இது தொடர்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமெரிக்கத் தூதுவர் இதனை தெரிவித்தார்

அறுகம்பை பகுதிக்கு விஜயம் செய்யும் போது அமெரிக்க பிரஜைகளுக்கு அவதானத்துடன் செயற்படுமாறு மாத்திரமே அறுவுறுத்தல் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்

அறுகம்பை பகுதியில் குறிப்பிட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல் எச்சரிக்கை காணப்படுவதாக தகவல் கிடைத்த சந்தர்ப்பத்தில், அதனை இலங்கை அதிகாரிகளுடன் பகிர்ந்தோம்.

அத்துடன் தொடர்ச்சியாக அன்றாடம் இந்த விடயம் தொடர்பில் இலங்கை தலைமைத்துவத்துடனும் பாதுகாப்பு அதிகாரிகளுடனும் நாங்கள் கலந்துரையாடினோம்.

எவ்வாறெனினும், இலங்கைக்கான பயண ஆலோசனை தொடர்பான சில பிழையான தகவல்கள் வெளியாகும் நிலையில் அதனை தெளிவுபடுத்த வேண்டிய தேவை தமக்கு உள்ளதாகவும் மறு அறிவிப்பு வரும் வரை அறுகம்பேக்கு பகுதிக்கு பயணிக்க வேண்டாம் அண்மையில் அறிவித்திருந்தோம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

Recommended For You

About the Author: admin