உரிமை கோரப்படாத நிலையில் சொகுசு வாகனமொன்று மீட்பு!

ஐக்கிய மக்கள் சக்தியின் தென் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பயன்படுத்திய சொகுசு வாகனமொன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

மாத்தறை பாபுரண பிரதேசத்தில் சொகுசு வாகனமொன்று கைவிடப்பட்டுள்ள நிலையில் மாத்தறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் குழுவொன்று அந்த இடத்திற்கு சென்று குறித்த கெப் வாகனத்தை கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கெப் வாகனம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட வாகனம் ஐக்கிய மக்கள் சக்தியின் தென் மாகாண சபை முன்னாள் உறுப்பினருடையது என தெரியவந்துள்ளது.

கைப்பற்றப்பட்ட வாகனம் அரசு பகுப்பாய்வாளர் ஒப்படைக்கப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளை மாத்தறை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin