சுங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்ட 637 வாகனங்கள்!

இலங்கை சுங்கத் திணைக்களத்தினால் கைப்பற்றப்பட்ட பல்வேறு மாதிரிகள் கொண்ட 637 வாகனங்கள், பாவனைக்கு தகுதியற்றதாக சிதைவடைந்துள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.
இவற்றில் 435 வாகனங்கள் மட்டக்குளியில் தனியார் நிறுவனத்திடம் இருந்து வாடகைக்கு எடுக்கப்பட்ட நிலத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.
மீதமுள்ள 202 வாகனங்கள் ருஹுனுபுர துறைமுக வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த வாகனங்களில் 36 வாகனங்கள் சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பறிமுதல் செய்யப்பட்டன.
சுங்கத் திணைக்களம் தொடர்பாக கடந்த ஆண்டிற்கான கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, அவற்றில் பல வாகனங்கள் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக சுங்கக் கணக்காய்வு அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: admin