பதவி விலகிய தென் மாகாண ஆளுநர்

தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இன்று தனது பதவி விலகினார். புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான சாத்தியக்கூறுககள் காரணமாக தான் பதவி விலகியதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் Read more »

மோடி – பைடன் சந்திப்பு: அமோக வரவேற்பளித்த இந்திய வம்சாவளியினர்

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் மாநாடு அமெரிக்காவின் டெல்வாரே நகரில் உள்ள வில்மிங்டனில் நடைபெறுகிறது. குவாட் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். பிலடெல்பியா விமான நிலையத்தில் பிரதமர்... Read more »
Ad Widget

இலங்கை வரலாற்றில் மிகவும் அமைதியான தேர்தல்: பஃவ்ரல்

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல், இலங்கை வரலாற்றில் மிகவும் அமைதியான தேர்தலாக இடம்பிடிக்குமென சுதந்திரமானதும் மற்றும் நியாயமானதுமான தேர்தலுக்கான (PAFFREL) அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். தேர்தலின்போது அரச... Read more »

அனுரவிற்கு பலரும் வாழ்த்து: தோல்வியையும் ஒப்புக்கொண்டனர்

தபால்மூல வாக்குகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் பெரும்பாலான மாவட்டங்களில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க முன்னிலை வகிக்கின்றார். இந்நிலையில் இலங்கை ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவின் தோல்வியை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா ஒப்புக்கொண்டுள்ளதோடு... Read more »

ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார வெற்றி: பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் தகவல்

ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க வெற்றி பெற்றுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்பாட்டாளர் மிலிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தனது முகநூல் பக்கத்தில் விடுத்துள்ள பதிவொன்றில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் அனுரகுமார திசாநாயக்க வெற்றிபெற்றுள்ளதாகவும், அரசியலில் நாமல்... Read more »

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது

நாடு முழுவதும் அமுலுக்கு வரும் வகையில் நேற்று இரவு 10.00 மணி முதல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமுல்படுத்திய ஊரடங்கு சட்டம் இன்று (22) காலை 06.00 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது. பொது பாதுகாப்பு சட்டத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த ஊரடங்கு சட்டம்... Read more »

அநுர முன்னிலை: நாட்டை வழிநடத்த அமைச்சர் அலி சப்ரி வாழ்த்து

ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்கவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப்பதிவில் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளதாவது, “நீண்ட மற்றும் கடினமான பிரச்சாரத்திற்குப் பிறகு,... Read more »

ரணில் நாமலின் ஆதரவாளர் நாட்டில் இருந்து வெளியேறினர்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் வெளிநாடு செல்லவுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, இன்று (22) அதிகாலை 12.50 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஹொங்கொங் செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தல் காலம்... Read more »

இதோ வந்துவிட்டது யூடியூபிலும் ஏஐ வசதி

யூடியூப் வலைத்தளமானது மக்களின் விருப்பத்துக்குரிய ஒன்று. அந்த வகையில் தற்போது யூடியூப் குறித்து புதிய அம்சம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் யூடியூப் நிறுவனத்தின் நிகழ்ச்சியில் பேசிய அந் நிறுவனத்தின் சி.இ.ஓ செயற்கை நுண்ணறிவின் மூலம் யூடியூபில் ஷொட்ஸ் செய்வதற்கு புதிய வசதி... Read more »

வன்னி தபால் மூல வாக்கு முடிவு!

நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் வன்னி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள்வெளியாகியுள்ளன. இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 4899 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளார். சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 4257வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளார். தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட... Read more »