இரட்டை குழந்தைகளை ஏற்க மறுத்த தாய் – மூவருக்கும் பிணை

பிறந்து 7 நாட்களே ஆன இரட்டைக் குழந்தைகளை விற்க முயன்ற குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மூன்று பெண்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் மூவரும் வெலிசர நீதவான் நீதிமன்றில் இன்று (08) ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்தே அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டது. மூவரையும் தலா ஒரு இலட்சம் ரூபா... Read more »

களனி பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு

களனி பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப்பீடம், வணிகப்பீடம், முகாமைத்துவப்பீடம் மற்றும் தொழில்நுட்ப பீடம் என்பவற்றின் கல்வி செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை (11) முதல் குறித்த கல்வி செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக களனி பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. குறித்த பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு அதிகாரிகள்... Read more »
Ad Widget

VAT வரி தொடர்பில் மீள் பரிசீலனை

2024 ஜனவரி மாதம் முதல் பெறுமதி சேர் வரி (VAT) அமுல்படுத்தப்படும் பொருட்களின் பட்டியலை மீள் பரிசீலனை செய்வதற்கு அரசாங்கம் தயாராக உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், 138 பொருட்களில் 97 பொருட்களை மீள்... Read more »

மஸ்கெலியாவில் புதிய சதொச விற்பனை நிலையம்

புதிய சதொச விற்பனை நிலையமொன்று மஸ்கெலியா நகரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று (08) காலை மஸ்கெலிய பிரதான வீதியில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயகவினால் சதொச விற்பனை நிலையமொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக குறித்த பிரதேசத்தில் சதொச விற்பனை நிலையமொன்று இல்லாதிருந்தமை... Read more »

பொதுமக்களிடம் தகவல் கோரும் பொலிஸார்

கற்பிட்டி – நுரைச்சோலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாவக்கடுவ, கொலனி பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரின் வீட்டில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தேடப்படும் இரு சந்தேக நபர்களை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர். நாவக்காடு – கொலனி பகுதியில் உள்ள குறித்த... Read more »

துப்பாக்கியுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த நபர் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபரை, இன்று (07) அதிகாலை பொலிஸார் கைது செய்தனர். துருக்கி செல்வதற்காக வந்த குறித்த நபரின் பயணப் பொதியில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் மறைத்து வைக்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டமையை அடுத்து, அந்நபரை விமான நிலைய பொலிஸார் கைது செய்தனர்.... Read more »

டிஜிட்டல் பொருளாதாரம்: இலங்கை பெண்களுக்கு அதிகாரமளிக்கும் புதுமைப்பெண் 2.0 ஆரம்பம்

இலங்கையிலுள்ள முழு பெண் சமூகத்தையும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் வலுவூட்டி, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி தேசிய பொருளாதாரத்தில் முன்னணி பங்கேற்பாளர்களாக மாற்றும் நோக்கில் சுஹுருலிய அல்லது புதுமைப்பெண் 2.0 உத்தியின் அறிமுகம் அண்மையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இல்லத்தரசி... Read more »

தங்கம் கலந்த மண் ஏற்றுமதி குறித்து தீவிர விசாரணை!

நாட்டில் இருந்து தங்கம் கலந்த மண் கொள்கலன்கள் சட்டவிரோதமான முறையில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகள் பல தடவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதன்மூலம் தங்கத்தைப் பெறுவதைத் தவிர, வேறு ஏதும் நோக்கங்கள் உள்ளனவா என தீவிர ஆய்வுகளும் விசாரணைகளும் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.... Read more »

ராஜபக்சக்களை பாதுகாக்க மாட்டேன்: ரணில் பதிலடி

“விடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்யும் நோக்கம் எனக்கு இல்லை. அதேவேளை, ராஜபக்சக்களை பாதுகாக்க வேண்டிய தேவையும் எனக்கு இல்லை.” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மாவீரர் தின நிகழ்வு தொடர்பிலும், நாட்டின் பொருளாதார நெருக்கடி குறித்து ராஜபக்ச தரப்புக்கு எதிராக உயர் நீதிமன்றம்... Read more »

ஜனாதிபதி ரணிலின் சிரேஷ்ட ஆலோசகராக வடிவேல் சுரேஷ் நியமனம்!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த தகவலை ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது. வடிவேல் சுரேஷ் அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவளித்து வருவதால் அவரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஐக்கிய மக்கள்... Read more »