பல்வேறு வீதிகள் மூடப்பட்டுள்ளது

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு வீதிகளின் போக்குவரத்து நடவடிக்கை தடைப்பட்டுள்ளது

கண்டி – மஹியங்கனை பிரதான வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சீரற்ற வானிலையினால் குறித்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக வீதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடும் மழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவு மற்றும் மரங்கள் முறிந்து விழுந்தமையால் இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதன்படி, மாத்தளை உக்குவெல – பண்டாரபொல வீதி, பல்லேபொல – கொஹொல்லன்வல வீதி ஆகியவற்றின் போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றாக தடைப்பட்டுள்ளது.

மேலும், லக்கல – ரிவஸ்டன் வீதி ஏற்பட்ட மண்சரிவு காரணமாக குறித்த வீதியின் போக்குவரத்து நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, மொனராகலை – சியம்பலாண்டுவ வீதியில் பல இடங்களில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதன் காரணமாக குறித்த வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin