மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இலங்கை மின்சார சபை (CEB) நிர்வாகத்திற்கு புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், எந்த ஒரு ஊழியரினதும் இராஜினாமாவை தயக்கமின்றி ஏற்குமாறு CEB க்கு அறிவுறுத்தினேன். நிறுவனத்திற்கு செலுத்த... Read more »
இலங்கையில் தொடர்ந்தும் மனித உரிமைகள் சவால்களுக்குட்பட்டு வருகின்றது. எனவே தமிழ் சமூகத்துடன் கனடா தொடர்ந்தும் பயணிக்கும் என்று கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “1983ஆம் ஆண்டு இலங்கையில் வன்முறைகள் ஆரம்பித்த காலத்தில் தமது தந்தையாரின் தலைமையிலான... Read more »
சர்வதேச கிரிக்கெட் பேரவை 2023ஆம் ஆண்டுக்கான மகளிர் டி20 அணியின் விபரத்தை இன்று திங்கட்கிழமை அறிவித்துள்ளது. இந்த அணியின் தலைவராக இலங்கை அணியின் பிரபல கிரிக்கெட் வீராங்கனை சாமரி அதபத்து நியமிக்கப்பட்டுள்ளார். ஐசிசி ஆடவர் மற்றும் மகளிர் அணியின் தலைவர்கள் மற்றும் அணியின் விபரத்தை... Read more »
சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் 2023 ஆம் ஆண்டுக்கான ஆடவர் டி20 அணியை திங்களன்று (22) அறிவித்தது. அந்த அணியின் தலைவராக சூர்யகுமார் யாதவ் பெயரிடப்பட்டுள்ளார். மேலும் ரவி பிஷ்னோய், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகிய மூன்று இந்திய வீரர்களும் குறித்த அணியில்... Read more »
பெலியத்த பகுதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பிரபல அரசியல் கட்சி ஒன்றின் தலைவர் உள்ளிட்ட ஐவர் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் பழிவாங்கும் நோக்கில் நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் 40 வயதான ஹசித... Read more »
இந்தியாவின் முதன்மையான பொறியியல் கல்லூரிகளில் ஒன்றான இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT Madras) இந்த ஆண்டு இலங்கையின் கண்டியில் தமது கிளை வளாகத்தைத் திறக்க உள்ளது. வெளிநாடுகளில் IIT யின் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக இந்த செயல்பாடு இருக்கும். புதிய வளாகத்திற்கான முன்மொழிவு கடந்த... Read more »
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்தை – கஹவத்த வெளியேறும் பகுதிக்கு அருகில், இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஐவர் உயிரிழந்த சம்பவமானது இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதில் அபே ஜன பல கட்சி தலைவர் சமன்பெரேரா சுட்டுக் கொலை செய்யப்பட்டிருந்தார். துப்பாக்கி சூட்டு... Read more »
கடந்த வெள்ளிக்கிழமையுடன் (19) ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது இன்று மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி இன்று 315.92 ரூபாவிலிருந்து 315.50 ரூபவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 326.06... Read more »
இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து ஆசிபெற்றுக்கொண்டுள்ளார். இந்த சந்திப்பின் போது சம்பந்தன் ஐயா, தனக்கு வாழ்த்து கூறியதாக சிறிதரன் எம்.பி எமது செய்திப் பிரிவிடம் கூறினார். 74 ஆண்டு கால வரலாற்றைக்கொண்ட இலங்கை... Read more »
2023 டிசம்பர் மாதத்துக்கான நாட்டின் பிரதான பண வீக்கம் 4.2% ஆக அதிகரித்துள்ளது. கடந்த நவம்பரில் நாட்டின் பிரதான பண வீக்கம் 2.8% ஆக காணப்பட்டது. உணவுப் பணவீக்கம் 2023 டிசம்பரில் 1.6% ஆக அதிகரித்துள்ளது. அது கடந்த நவம்பரில் -2.2% ஆக காணப்பட்டது.... Read more »

