யாழில் சங்கிலி அறுப்பு; திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் கைது; நகையும் மீட்பு

( யாழ் நிருபர் ரமணன் )

யாழ்ப்பாணம் பொலிஸ் பிராந்திய விசேட புலனாய்வுப் பொலிஸாரின் விசாரணை மூலம் திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் கைது செய்யப்பட்டார்.

கொடிகாமம் சியாமளா மில் வீதியில் தனிமையிலிருந்த மூதாட்டியின் ஒண்டரைப் பவுண் தங்கச் சங்கிலியினை திருடிச் சென்ற நபரே இவ்வாறு  கைது செய்யப்பட்டார்.

உபபொலிஸ் பரிசோதகர் இராஜரத்தினம் பிரதீப் தலைமையிலான பொலிஸ் குழுவினர் சந்தேக நபரைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம் குருநகர் பகுதியைச் சேர்ந்த 26 வயது நபர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அவரை சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor