யாழ் வல்வெட்டித்துறையில் வாள்வெட்டு!

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை நாவலடி ஊரிக்காடு பகுதியில் வாள்வெட்டு இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் இன்று அதிகாலை 2 மணியளவில் வாள் மற்றும் கோடாரியுடன் வீடு ஒன்றிற்குள் புகுந்த இரண்டு நபர்கள் 65 வயது மதிக்கத்தக்க வயோதிபரை தாக்கியுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதி

படுகாயமடைந்த வயோதிபர் ஊரணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதலை மேற்கொண்டவர்களில் ஒருவரை அயலவர்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேலதிக விசாரணையை வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்க்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor