கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் உள்ள புகையிரதக் கடவையில் இடம்பெற்ற விபத்தில் 17 வயதுடைய மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகாத நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை, குறித்த புகையிரதக் கடவையில் கடந்த சில நாட்களாக சமிக்ஞை விளக்குகள் மற்றும் எச்சரிக்கை அமைப்புகள் முறையாக இயங்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்திலும் சமிக்ஞை முறையாக இயங்கவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
புகையிரதக் கடவையில் சமிக்ஞை இயங்காத நிலையிலும், புகையிரதம் வருகிறதா என்பதை உறுதி செய்யாமல் கடந்து செல்வது மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். எனவே, ஒவ்வொரு சாரதியும் நிறுத்தி, இருபுறமும் அவதானித்து, புகையிரதம் இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே கடவையை கடக்க வேண்டும்.
பாதுகாப்பு சமிக்ஞை மீது மட்டும் நம்பிக்கை வைக்காமல், புகையிரதத்தின் வருகையை நேரடியாக அவதானிப்பதும் அவசியம். குழந்தைகள் மற்றும் வயோதிபர்களுடன் பயணிக்கும் போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
சமிக்ஞை மற்றும் எச்சரிக்கை அமைப்புகள் பழுதடைந்திருந்தால், அவற்றை உடனடியாக சீரமைப்பதுடன், அதுவரை தற்காலிக பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

