உக்ரைனில் Shopping Centre மீது ரஷ்ய ட்ரோன் தாக்குதல் — 6 பேர் பலி, 90 பேர் காயம்!

உக்ரைனின் மத்திய பகுதியில் உள்ள Kryvyi Rih நகரில், வெள்ளிக்கிழமை ரஷ்ய ட்ரோன்கள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 90 பேர் காயமடைந்துள்ளதாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் 6 குழந்தைகளும் அடங்குவதாக கூறப்படுகிறது.
21 பேர் தீவிர நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் ஒரு குழந்தையும் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அதிர்ச்சியளிக்கும் தகவலாக, முதல் ட்ரோன் தாக்குதலுக்கு சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு மற்றொரு ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் அதிபர் Volodymyr Zelenskiy கூறியுள்ளார். இந்த இரண்டாவது தாக்குதல் அவசர மீட்புப் பணியாளர்களை குறிவைத்ததாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த தாக்குதல் குறித்து உக்ரைன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த தகவல்கள் Reuters வெளியிட்ட செய்தி மற்றும் உக்ரைன் அதிகாரிகளின் அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. போருக்கால தகவல்கள் தொடர்ந்து மாறக்கூடும்.

Recommended For You

About the Author: admin