ஒரே நாளில் இரு தடவை மாற்றமடைந்த தங்க விலை : புதிய விலை நிலவரம்!

உள்ளூர் சந்தையில் தங்கத்தின் விலை நண்பகலின் பின் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று (14) நண்பகல் வரை 24 கரட் தங்கம் ஒரு பவுண் 374,000 ரூபாயாக விற்பனையான நிலையில், தற்போது அதன் விலை 2,000 ரூபாயால் அதிகரித்து 376,000 ரூபாயாக பதிவாகியுள்ளது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 376,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 346,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,250 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் வாங்கத் திட்டமிட்டுள்ளோர், சந்தை விலை மாற்றங்களைத் தொடர்ந்து கவனித்து வாங்குவது சிறந்தது என நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

Recommended For You

About the Author: admin