மொத்தம் 48 அணிகள், 104 போட்டிகளுடன் பிஃபா உலகக் கிண்ணம் இன்று ஆரம்பம்.
பிஃபா உலகக் கிண்ண கால்பந்து போட்டி வரலாற்றில் முதல்முறை 48 அணிகளுடன் மொத்தம் 104 போட்டிகளைக் கொண்டதாக இன்று (11) ஆரம்பமாகவுள்ளது.
அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா இணைந்து நடத்தும் இந்த உலகக் கிண்ணத்தின் போட்டிகள் இலங்கை நேரப்படி நாளைய தினத்திலேயே ஆரம்பமாகும்.
இதன்படி மெக்சிகோ மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மெக்சிகோ சிட்டியில் மோதும் முதல் போட்டி இலங்கை நேரப்படி நாளை நள்ளிரவு தாண்டி 12.30 மணிக்கே ஆரம்பமாகும்.

