எங்களை சீரழிக்க சிங்களப் பேரினவாதம் தீவிர முயற்சி! சிவாஜிலிங்கம் சீற்றம்

வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் பொலிஸ் மற்றும் படையினர் அதிகமாக குவிக்கப்பட்டுள்ளபோதும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாவனையைத் தடுக்க முடியாதுள்ளது. இதன் மூலம் எங்களைச் சீரழிக்க சிங்களப் பேரினவாதம் முயற்சிக்கிறது என்பது தெளிவாகிறது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார்.

வல்வெட்டித்துறையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், போதைவஸ்து பாவனை மற்றும் திருட்டுச் சம்பவங்கள் என்பன தற்போது அதிகரித்துக் காணப்படுகின்றன.

இதனைக் கட்டுப்படுத்த அனைத்துக் கட்சிகளும் எவ்வித பேதமின்றி இணைந்து போதைப்பொருள் பாவனைக்கு எதிராகச் செயற்பட வேண்டும். விழிப்புக்குழுக்களை உருவாக்கி செயற்பட வேண்டும்.

பொலிஸ் மற்றும் படையினர் அதிகமாக இருந்தும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாவனையைத் தடுக்க முடியாதுள்ளது. எங்களைச் சீரழிக்க சிங்களப் பேரினவாதம் முயற்சிக்கிறது. இதனை அனைவரும் இணைந்து முறியடிக்க வேண்டும் – என்றார்.

மேலும், எங்களை சீனா பகடைக்காயாக்க முயற்சிக்க வேண்டாம். குழம்பிய குட்டையில் சீனா மீன்பிடிக்கக்கூடாது.

சீனத் தூதரகத்திடம் பெற்ற உதவி தொடர்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தரின் கருத்து வேடிக்கையானது- என்றார்.

Recommended For You

About the Author: webeditor