முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம்
தமிழ்நாடு ஆளுநராக இருந்த ரவி சமீபத்தில் தான் மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவர் நேற்றைய தினம் மேற்கு வங்க ஆளுநராகப் பதவியேற்ற நிலையில், முதல் நாளே முதல்வர் மம்தாவுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே முக்கிய சம்பவம் நடந்துள்ளது.
இது தொடர்பாக நாம் பார்க்கலாம்!
இந்தச் சூழலில் தான் மேற்கு வங்கத்தின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவி, கொல்கத்தாவில் உள்ள லோக் பவனில் நேற்று பதவியேற்றார். 15 நிமிடங்கள் நடைபெற்ற இந்த விழாவில், கொல்கத்தா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சுஜோய் பால், ஆளுநர் ரவிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஆளுநரின் குடும்பத்தினர் மற்றும் பல்வேறு உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஆளுநர் ரவி
இந்தியாவிலேயே மிகவும் பழமையான ஆளுநர் மாளிகையான கொல்கத்தா ஆளுநர் மாளிகையில் இந்த பதவியேற்பு விழா நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் இன்னும் சில நாட்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள சூழலில், ஆளுநர் ரவி பதவியேற்று இருக்கிறார். 1976 பேட்ச் கேரளா கேர்டர் ஐபிஎஸ் அதிகாரியான ஆர்.என். ரவி, உளவுத் துறையின் சிறப்பு இயக்குநராகப் பணியாற்றியவர். இதற்கு முன் 2019 முதல் 2021 வரை நாகாலாந்து ஆளுநராக இருந்துள்ளார். 2019 முதல் 2026 வரை தமிழக ஆளுநராகவும் இருந்துள்ளார். தமிழ்நாடு ஆளுநராக இருந்தபோது இவருக்கும் தமிழக அரசுக்கும் தொடர்ந்து மோதல் போக்கே இருந்தது குறிப்பிடத்தக்கது.
மோதல்
தமிழ்நாடு சட்டசபை இயற்றி அனுப்பிய பல மசோதாக்களுக்கு அனுமதி அளிக்காமல் ஆளுநர் ரவி கிடப்பில் போட்டார். இதற்காகத் தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட் வரை கூட செல்ல வேண்டி இருந்தது. அதேபோல ஒவ்வொரு ஆண்டும் சட்டசபை கூட்டத்தொடர் முதலில் கூடும்போது ஆளுநர் உரையுடன் தான் தொடங்க வேண்டும். இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாகவே தமிழக அரசு தயாரித்துக் கொடுக்கும் ஆளுநர் உரையை ரவி படிக்க முடியாது என மறுத்தார். இதிலும் தொடர்ந்து மோதல் போக்கே நிலவி வந்தது. இந்தச் சூழலில் தான் தேர்தலுக்கு சில வாரங்களுக்குப் பிறகு, அவர் மேற்கு வங்கத்திற்கு மாற்றப்பட்டார்.
மம்தா
இதற்கிடையே முதல் நாளே முதல் மம்தாவுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே மோதல் ஆரம்பித்துவிட்டது. அதாவது பதவியேற்பு விழா முடிந்ததும், முதல்வர் மம்தா பானர்ஜியும் ஆளுநரும் தேநீர் விருந்தில் பங்கேற்றனர். அதில் ஆளுநரின் மனைவியும் இருந்தார். அப்போது, ஆளுநரின் மனைவிக்கு மம்தா பானர்ஜி மேற்கு வங்க அரசின் பிஸ்வா பங்களா’ கைத்தறி சால்வைகளை அன்பளிப்பாக வழங்கினார்.
முதல் நாளே சம்பவம்
அப்போது மம்தாவிடம் ஆளுநர் ரவி ஏதோ சொல்லிக் கொண்டு இருந்தார். அதை இடைமறித்த மம்தா, “மேற்கு வங்கம் மிகச் சிறப்பானது. அதைச் சுற்றிப் பாருங்கள்.. வங்கத்தின் கலாச்சாரம் தனித்துவமானது. வங்கத்தை நேசிப்பவர்களை வங்க மக்கள் நேசிப்பார்கள்” என்றார். அவர் சொல்லச் சொல்ல ஆளுநர் ரவி முகத்தில் இருந்த சிரிப்பு மெல்ல மறைந்தது. மம்தாவுக்கு பதிலளித்த ஆளுநர் ரவி, “மேற்கு வங்கம் நான் போற்றும் ஆன்மீக, அறிவுசார் மற்றும் கலாச்சாரத் தலைநகரம்” என்று குறிப்பிட்டார்.
மம்தாவும் அதை அமைதியாகக் கேட்டுக் கொண்டு இருந்தார். பிறகு அவர், “நான் கிளம்புகிறேன். சீக்கிரமே மீண்டும் உங்களைச் சந்திக்கிறேன்” என்று கூறிவிட்டுக் கிளம்பினார். முதல் நாளே இப்படி இருவரும் மாறி மாறி கருத்துகளைச் சொல்லியிருக்கும் சூழலில், வரும் நாட்களில் மோதல் மேலும் அதிகரிக்கலாம் எனத் தெரிகிறது

