இலங்கையின் பொருளாதார வலயத்தில் மற்றுமொரு ஈரானியக் கப்பல்

பாணந்துறை கடற்பரப்பிற்கு அருகிலுள்ள இலங்கையின் பிரத்யேக பொருளாதார வலயத்தில் மற்றுமொரு ஈரானியக் கப்பல் இலங்கையின் துறைமுகத்தைப் பயன்படுத்த அனுமதி கோரப்பட்டுள்ளது..

இலங்கை கடல் எல்லைக்கு அருகில் உள்ள தனிச்சிறப்பு பொருளாதார கடல் மண்டலத்தில் (Exclusive Economic Zone) மற்றொரு ஈரான் கப்பல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த கப்பலில் உள்ள சுமார் 300 குழந்தைகளுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்குவதற்காக, கப்பலை 24 மணிநேரத்திற்கு இலங்கையின் ஒரு துறைமுகத்தை அடைய அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கையை இலங்கை அதிகாரிகள் பரிசீலித்து வருவதாகவும், மனிதாபிமான அடிப்படையில் உதவி வழங்குவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Recommended For You

About the Author: admin