விபுலானந்தர் மற்றும் பாரதியார் சிலைகள் யாழில் திறப்பு

( யாழ். நிருபர் ரமணன் )

வரலாற்று பெருமை மிக்க வடக்கையும் கிழக்கையும் ஆன்மீகத்தால் முத்தமிழால் கல்விப் பணிகளால் இணைத்த ஈழம் தந்த சைவத் தமிழ்ப் பெரியார் சுவாமி விபுலானந்த அடிகளார், மகாகவி சுப்பிரமணிய பாரதியார் ஆகியோரின் சிலைகள் இன்று காலை யாழ்ப்பாணத்தில் திறந்துவைக்கப்பட்டன.

யாழ் – மானிப்பாய் – காரைநகர் வீதியில் யாழ். நுழைவாயில் சந்தியில் இடம்பெற்றது.

சைவத் தமிழ்ப் பெரியார் சுவாமி விபுலானந்த அடிகளாரின் சிலையை
தென் கயிலை ஆதீனக் குருமுதல்வர் அகத்தியர் அடிகளார் திறந்து வைத்தார்

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் சிலை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சிறிசற்குணராசாவால் திறந்து வைக்கப்பட்டது.

சிலைகள் திறப்பு விழாவில் யாழ். மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி மணிவண்ணனும் அகில இலங்கை சைவ மகா சபைத் தலைவர் சிவத்திரு சண்முகரத்தினமும், சமூக ஆர்வலர்களும் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: webeditor