ஜேர்மனி செல்லும் அகதிகள் குறித்து அந் நாட்டு அரசு வெளியிட்டுள்ள செய்தி!

ஜெர்மனியில் விலைவாசி உயர்வினால் அகதிகளாக வருபவர்களைத் தங்க வைக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் கடந்த பெப்ரவரி மாதம் முதல் தொடர்ச்சியாகப் போர் இடம்பெற்று வருகின்றது. இதனால் உக்ரேனில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் அண்டைய நாடுகளில் தஞ்சம் கோரி வருகின்றனர்.

குறிப்பாக ஏராளமான மக்கள் ஜேர்மனியை நோக்கிப் படையெடுப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அகதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அவர்களைத் தங்க வைப்பதற்கு இடம் இல்லை என ஜேர்மனி அரசு தெரிவித்துள்ளது.

மேலும் இதுகுறித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில் ” உக்ரேன் ரஷ்ய போர் தொடர்ந்து நீடித்துக் கொண்டே வருகிறது.

இது எப்போது முடியும் என்பது யாருக்கும் தெரியாத ஒன்றாகவுள்ளது. தற்போது விலைவாசி உயர்வு, மின் கட்டணம் உயர்வு ஆகிய பிரச்சினைகளில் ஜேர்மனி மக்கள் சிக்கி தவிக்கின்றனர்.

இதனால் பலர் தங்களது வீடுகளில் அகதிகளைத் தங்க வைக்கும் நிலையில் இல்லை. எனவே அவர்கள் உடற்பயிற்சி கூடம் போன்ற இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.

ஆனால் அவர்கள் அங்கு நிரந்தரமாக தங்க வைக்க முடியாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor