யோகக்கலை கற்கைநெறியின் புதிய பிரிவு நல்லூரில் ஆரம்பம்

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இளைஞர் விவகார அலகினால் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்ற யோகக்கலை கற்கை நெறியின் புதிய பிரிவு 08.10.2022 இன்று நல்லூர்க் கந்தன் ஆலய பின் வீதியில் அமைந்துள்ள நல்லூர் மங்கையற்கரசி வித்தியாலயத்தில் ஆரம்பமானது.

இளைஞர் விவகார அலகின் உதவிச் செயலாளர் திருமதி சிவப்பிரியா சுபாஸ்கரன் தலைமையில் ஆரம்பமாகிய இக் கற்கைநெறி சனி, ஞாயிறு தினங்களிலும் அரச விடுமுறை தினங்களிலும் காலை 6.00 மணிமுதல் 8.00 மணிவரை நடைபெறும்.

இவ்வகுப்புக்களில் 19 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் இரு பாலாரும் கலந்துகொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.

சுமார் மூன்று மாத காலங்களைக் கொண்டமைந்த இவ் அடிப்படைக் கற்கை நெறியைப் பூரணமாக முடிப்பவர்களுக்கு கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor