யாழ். பிறவுண் வீதியில் இன்று காலை விபத்து

யாழில் இன்று காலை கார் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகின.

யாழ்ப்பாணம் பிறவுண் வீதிச் சந்தியில் இன்று காலை 6 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் தட்டாதெரு சந்தியிலிருந்து அரசடி வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கிள் கந்தர்மடம் பகுதியிலிருந்து அரசடி வீதியில் வந்து கொண்டிருந்த காருடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. இருப்பினும் இரண்டு வாகனங்களும் சிறிதளவில் சேதங்களுக்குள்ளாகின.

Recommended For You

About the Author: webeditor