கோப்பாய் சமிக்ஞை விளக்கு மின்சாரம் துண்டிப்பு..பணம் கட்டவில்லையாம் !
கோப்பாய் சந்தியில் அமைந்துள்ள வீதி சமிஞ்ஞை மின்விளக்கின் மின்சாரத்தை இலங்கை மின்சார சபை நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை துண்டித்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பராமரிப்பில் உள்ள கோப்பாய் சந்தி மின் சமிஞ்ஞை விளக்குக்கான மின்சார கட்டணம் நிலுவையில் உள்ள நிலையில் மின்சார சபை குறித்த மின்னினைப்பை துண்டித்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் புத்தூர் பிரதேச சபை உறுப்பினர் ஐங்கரன் கருத்து தெரிவிக்கையில்.
குறித்த மின்விளக்கு அமைந்துள்ள சந்தியானது மிகவும் நெரிசல் மிக்க பாரவூர்திகள் கடந்த செல்லும் சந்தியாக காணப்படுகிற நிலையில்
கடந்த ஞாயிற்றுக்கிழமை குறித்த சந்ததியில் விபத்து ஒன்றும் பதிவாகி இருந்தது.
இவ்வாறான ஒரு நிலையில் இரண்டு திணைக்களங்களும் அரச திணைக்களங்களாக காணப்படுகின்ற நிலையில் மக்களுக்கு ஏற்படும் ஆபத்துக்களை விளங்கிக் கொள்ளாமல் மின்சாரத்தை துண்டித்தமை கண்டிக்கத்தக்க விடையம் என தெரிவித்தார்.

