சர்வதேச நீதி கோரிய கையெழுத்து போராட்டம் இன்றைய தினம் பருத்தித்துறையில் இடம்பெற்றது..!
செம்மணி இலங்கையின் வடக்கு கிழக்கு மண்ணில் உள்ள மனித புதை குழிக்குள் ஆனதும் நடைபெற்ற இனப்படுகொலைக்குமான சர்வதேச நீதி கோரிய கையெழுத்து போராட்டம் கடந்த 29ம் திகதி ஆரம்பமாகிய நிலையில் இன்றய தினம் பருத்தித்துறை நகர பகுதியில் பலத்த வரவேற்பின் மத்தியில் காலை 9 மணியளவில் ஆரம்பமாகி மிகவும் சிறப்பாக இடம்பெற்றது வருகிறது
இவ் கையெழுத்து போராட்டமானது தமிழ் தேசிய கட்சிகள் மற்றும் பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் இடம்பெற்று வருவதோடு இன்றைய தினம் கையெழுத்து போராட்டத்தில் ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் சி.வேந்தன் அவர்களும் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் பருத்தித்துறை நகர சபையினர் உப தவிசாளர் மற்றும் நகர சபை உறுப்பினர்கள் மற்றும் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் மாணவிகள் என பலரும் கலந்து கொண்டனர்.


