யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சிலவேளை பார்வையிடலாம் என கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க யாழப்பாணத்திற்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ள நிலையில் இதுவரை செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடுவது பற்றி எந்தவொரு ஆலோசனையும் செய்யப்படவில்லை எனினும், சிலவேளை அவர் செம்மணி மனிதப் புதைக்குழியை அவர் பார்வையிட வாய்ப்புள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இதனை தெரிவித்தார்.

