நெடுந்தீவு பிரதேச செயலகத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட திரு. என். பிரபாகரன் அவர்களும், மற்றும் பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட திரு என். திருலிங்கநாதன் அவர்களும் இன்றைய தினம் (25.08.2025) காலை 09.00 மணிக்கு அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் முன்னிலையில் கடமையேற்றார்கள்.
இதன் போது மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் திரு. ஆ. சத்தியமூர்த்தி ஆகியோர் உடனிருந்தார்கள்.
மேலும் இன்றைய தினம் (25.08.2025) பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட திரு என். திருலிங்கநாதன் அவர்கள் தமது கடமையினை இன்று பொறுப்பேற்றார் என்பதுடன், நெடுந்தீவு பிரதேச செயலகத்திற்கு நியமிக்கப்பட்ட திரு. என். பிரபாகரன் அவர்கள் தமது கடமையினை நாளை மறுதினம் பொறுப்பேற்க்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

